Pages

Sunday, October 30, 2011

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது – லக்ஸ்மன் விக்ரமசிங்க!

Sunday, October 30, 2011
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரமளவில் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவதா இல்லையா என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டுமென லக்ஸ்மன் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் எட்டு பேர் அடங்கிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை ஜனாதிபதி நியமித்திருந்தார். 2002ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை செய்யும் நோக்கில் ஆணைக்குழு நிறுவப்பட்டது.

No comments:

Post a Comment