Pages

Friday, September 30, 2011

தொம்பேயில் காவல்துறையினர் பொதுமக்கள் மோதல்:தொம்பே பொலிஸ் நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்!

Friday, September 30, 2011
கம்பஹா தொம்பே காவல்துறை நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் மரணமானார்.

இதனையடுத்து தொம்பே காவல்துறை நிலையத்தின் மீது பொதுமக்களால் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது

இதன்போது பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக காவல்துறையினரின் பல வாகனங்கள் சேதமைடைந்தன

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்

காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி மெக்ஸி புரொக்டர் இதனை தெரிவித்துள்ளார்...

தொம்பே பொலிஸ் நிலையத்துக்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment