Pages

Saturday, September 3, 2011

வத்தளை ஹெரவலப்பிட்டியவிலுள்ள சுப்பர் மார்க்கட்டில் லிப்டில் சிக்கியவர்களை மீட்க முயன்ற பொலிஸ் அதிகாரி துடிதுடித்து மரணம்!

Saturday, September 03, 2011
வத்தளை ஹெரவலப்பிட்டியவிலுள்ள சுப்பர் மார்க்கட்டில் லிப்டினுள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நால்வரைக் காப்பாற்றும் மனிதாபிமான முயற்சியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


42 வயதான லலித் ஜானக அன்ரனி என்ற கடமையுணர்வுள்ள இந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கால்தவறி அந்த லிப்ட் செல்லும் இடைவெளிக்குள் சென்று கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் ராகம ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் மரணமடைந்தார்.

இரண்டு மாடிகளுக்கு நடுவில் இருந்த லிப்டில் சிக்கிக் கொண்ட போதே அதில் இருந்த ஒரு பெண்ணையும் மேலும் மூவரையும் காப்பாற்றி வெளியில் எடுப்பதற்கு எடுத்த முயற்சியே அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை பலி கொண்டது.

இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment