Pages

Thursday, August 18, 2011

காவல்துறை சாஜண்ட் கைது!

Thursday, August 18, 2011
கண்டி நீதிமன்றத்தின் அலுவலக ஊழியர்களின் கடமைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் காவல்துறை சாஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்குடா காவல்துறை பிரிவில் பணிபுரியும், இந்த காவல்துறை சாஜண்ட் வழக்கு விசாரணை ஒன்றின் பொருட்டு கண்டி சென்றுள்ளார்.

இந்த நிலையில், கண்டி நீதிமன்ற அலுவலக ஊழியர்களின் பணிகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment