Pages

Sunday, August 28, 2011

தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! பலத்தை காட்ட மதுரையில் எஸ்.ஏ.சந்திரசேகர் டேரா!.

Sunday, August 28, 2011
வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று (28.08.2011) மதுரையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த மூன்று நாட்களாக மதுரையில் முகாமிட்டிருந்தார்.

கடந்த 4 வருடமாக விஜய் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் அதை சமாளிக்க இரவு பகலாக படாத பாடுபட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். இனியும் விஜய்யின் படங்கள் தோல்வி அடையக்கூடாது, ரசிகர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவும், வேலாயுதம் படத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ரசிகர்களை திரட்டவும், விழாவுக்கான அனுமதி, பாதுகாப்பு போன்ற விஷயங்கள், வரவேற்பு தட்டிகள் போன்றவைகளை கவனிக்கவும் மதுரையில் எஸ்.ஏ.சந்திரசேகர் முகாமிட்டிருந்தார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட ஏற்பாடு செய்து வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ரசிகர்களை திரட்டி விஜய்யின் பலத்தை காண்பிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதனை வைத்து உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கதுக்காக அதிமுக தலைமையிடம் அதிக இடங்களை கேட்டு பெறலாம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் திமுகவுக்கு தங்களது பலத்தை காட்டிய விஜய் மற்றும் அவரது தந்தையும், தற்போது அதிமுகவுக்கு தங்களது பலத்தை காட்ட உள்ளனர்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்ளை பெற இரண்டு நடிகர்கள் கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு முதல்வருக்கு பாராட்டு மழை பொழிகிறது. இந்நிலையில் விஜய்யும் தனது கூட்டத்தை காண்பிப்பதால் அதிமுக என்ன முடிவு எடுக்கிறது என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்.

No comments:

Post a Comment