Pages

Tuesday, August 30, 2011

பிரதேச சபைத் தலைவரை படுகொலை செய்ததாக ஊர்காவற்றுறையில் மாணவர் கைது!

Tuesday, August 30, 2011
பதினொரு வயதில் பிரதேச சபைத்தலைவரை படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டி பாடசாலை மாணவனொருவன் ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியினில் கைது செய்யப்பட்டுள்ளான். எனினும் ஊர் மக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பினையடுத்து கைது செய்யப்பட்ட மாணவன் இன்று விடுவிக்கப்பட்டுள்ளான். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தினில் இருந்து வந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிஸாரே நேற்றிரவு இம்மாணவனை கைது செய்துள்ளனர்.

16 வயதுடைய கிருஸ்ணகுமார் மணி எனும் மாணவனே கைது செய்யப்பட்டுள்ளான். சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்த ஈபிடிபி கட்சியின் பிரதேச சபைத்தலைவரொருவரது மரணத்துடன் இம்மாணவன் தொடர்பு பட்டிருந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து ஏற்பட்டிருந்த இழுபறிகளையடுத்து காலை இம்மாணவன் விடுவ்க்கப்பட்டுள்ளான். எனினும் அண்மையில் இப்பகுதியினில் சர்ச்சைக்குரிய வகையினில் புலிக்கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பினில் இக்கைது இடம்பெற்றிருக்கலாமென சந்கேகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment