Pages

Friday, August 19, 2011

யாழ்.சுழிபுரத்தில் சிறுமி மாயம்!

Friday, August 19, 2011
யாழ்.சுழிபுரம் பாண்டவெட்டப் பகுதியில் எட்டு வயதுச் சிறுமியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோரால் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்ற சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவரைக் கண்டுபிடித்து தருமாறு சிறுமியின் பெற்றோர்களினால் உருக்கமான வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. காட்டுப்புலம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி சாளினி (வயது 8) என்ற பாடசாலைச் சிறுமியே காணாமல் போனவராவார். இச்சம்பவம் தொடர்பாக வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என ஊரவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment