Pages

Monday, August 22, 2011

புலிகள் சர்வதேச ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நியாயாதிக்க சபையில் இலங்கை முறையிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

Monday, August 22, 2011
புலிகள் சர்வதேச ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நியாயாதிக்க சபையில் இலங்கை முறையிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஆசியன் ரிபியூன் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

புலிகள், சர்வதேச ரீதியாக மேற்கொண்ட குற்றச்செயல்களை மையமாகக்கொண்டு இந்த நடவடிக்கையை இலங்கை மேற்கொள்ளலாம் என்று ஆசியன் ரிபியூன் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்காக லண்டனில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடம் இருந்து இலங்கை அரசாங்கம், புலிகள்ளின் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளதாக ஆசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது

நாடுகள் தமது முறைப்பாடுகளை சர்வதேச சட்டமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்வதற்கு சர்வதேச நியாயாதிக்க சபை உதவுகிறது

இந்தநிலையில் புலிகள் நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி,ஸ்பெய்ன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment