Pages

Sunday, August 28, 2011

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை-தமிழச்செல்வனின் மனைவி சசிரேகா!

Sunday, August 28, 2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என புலிகளின் முன்னாள் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழச்செல்வனின் மனைவி சசிரேகா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தத்தின் போதே புலிகளின் சகல சிரேஸ்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மோதல்களிலேயே சகல சிரேஸ்ட தலைவர்களும் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு மே மாதம் 16 அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் தாம் பிரவேசித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சியை பல தடவைகள் புலிகள் தடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தொடர்பில் போலியான தகவல்களை பிரச்சாரம் செய்து புலம்பெயர் தமிழர்கள், இலங்கை வாழ் தமிழர்களை பிழையாக வழிநடத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டம் வரையில் யுத்த வலயத்தில் இருந்த தாம் உண்மை நிலைமைகளை அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment