Pages

Tuesday, July 19, 2011

சிக்கலில் சீமான் : வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு!.

Tuesday, July 19, 2011
சென்னை : சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீமான் மீதான பாலியல் பலாத்கார வழக்கு குறித்த கேள்விக்கு ஆணையர் திரிபாதி பதில் தெரிவித்துள்ளார். தன்னுடன் 2 மாதம் குடும்பம் நடத்தி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகாராகும். புகார் கொடுத்த நிலையில் போலீஸ் நடிவடிக்கை இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார். போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் நடிகை திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சீமானை கைது செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment