Pages

Tuesday, August 21, 2012

வாழைச்சேனையில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்- இருவருக்கு காயம்!

Tuesday, August 21, 2012
இலங்கை::மட்டக்களப்பு வாழைச்சேனையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவநேசன் தலைமையிலான ஆதரவாளர்கள் மீது குழுவினரே சோடா போத்தல்களைக் கொண்டு இத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த இரண்டு தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு ஆதரவாளர்கள் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த (புலி)கூட்டமைப்பு வேட்பாளரான சிவநேசன் தங்களது தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக ஜனநாயக ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடும் எங்களது ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் குழுவினர் இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் இது குறித்து வாழைச்சேனைப் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment