Pages

Tuesday, August 28, 2012

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலி!

Tuesday, August 28, 2012
இலங்கை::இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளார்.

சுரேஸ் என்.ஏ. க்ரவுஸ் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிளக்கொக் ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் சுரேஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 படையதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ சேவை, தேசிய பாதுகாப்பு சேவை, நேட்டோ படையணி போன்றவற்றின் இராணுவ விமானிப் பதக்கங்களை சுரேஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஸ் 2007ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்து கொண்டதாவும், 2009ம் ஆண்டு முதல் பிளக்கொக் ஹெலிகொப்டர் விமானியாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

29 வயதான சுரேஸ் ஆப்கானிஸ்தான் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment