Thursday, October 23, 2014

வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கால வரையறையற்றவை: இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Thursday, October 23, 2014
இலங்கை::வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கால வரையறையற்றவை என தெரிவித்துள்ள இராணுவபேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.
 
 இது அவசரஅவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, வட பகுதி; நிலவரம் குறித்த குறிப்பிட்ட காலத்திற்க்கொரு முறை ஆராய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை வடபகுதியின் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி செல்லும் வெளிநாட்டவர்கள்(வெளிநாட்டு கடவுச்சீட்டையுடவர்கள்) ஒமந்தையில் திருப்பி அனுப்ப படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்க்கு குந்தகம் விளைவிக்ககூடிய தற்போதைய விடயங்களை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது, இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment